ரசிய யூரல் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ சதியால் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.மேலாண்மை அமைச்சர் அலெக்சாண்டர் குரென்கோவ் தெரிவித்துள்ளார்.
தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் பரவிய காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன.
வெர்த்லோவ் பகுதியில் 54000 பரப்பளவில் அரியவகை மரங்கள், செடி, கொடிகள் தீக்கிரையாகின. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் 4 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெர்த்லோவ் பகுதியில் துப்பாக்கி வெடிமருந்து குடோனில் பற்றிய தீ, உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகில் வசித்தவர்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.