Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் 500 விமானங்களை வாங்க ஒப்பந்தம்; ரிஷி சுனக் வரவேற்பு

500 விமானங்களை வாங்க ஒப்பந்தம்; ரிஷி சுனக் வரவேற்பு

0 minutes read

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 ‘ஏ320’ ரக விமானங்களை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இன்டிகோ வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

ஏர்பஸ் – இன்டிகோ இடையிலான இந்த ஒப்பந்தம், இங்கிலாந்தின் விமானத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வரவேற்றுள்ளார்.

“இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தம் எங்கள் விமானத்துறைக்கான மிகப்பெரிய வெற்றி. இது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பொருளாதாரத்தை வளர்க்க உதவுகிறது” என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More