Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பகவத்கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 10,000 பேர் பங்கேற்பு

பகவத்கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 10,000 பேர் பங்கேற்பு

1 minutes read

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 4 முதல் 84 வயதுக்கு உட்பட்ட 10 ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை யோகா சங்கீதா மற்றும் எஸ்.ஜி.எஸ். கீதா பவுண்டேசன் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சி, உலக புகழ் பெற்ற ஆன்மீக சுவாமிகளான பூஜ்ய கணபதி சச்சிதானந்த ஜி முன்னிலையில் நடந்ததாக இந்தியா – மைசூரு நகரில் உள்ள அவதூத தத்தா பீடம் ஆசிரமம் தெரிவித்துள்ளது.

சுவாமி பூஜ்ய கணபதி சச்சிதானந்தவின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கீதை உச்சரிப்பில் ஈடுபட்டனர்.

அவர்களில் பலர் 8 ஆண்டுகளாக சுவாமியை பின்பற்றி அதனை நினைவில் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்து ஆன்மீக தன்மையை பரப்பும் நோக்கில், கடந்த சில நாட்களாக யோகா சங்கீதா மற்றும் எஸ்.ஜி.எஸ். கீதா பவுண்டேசன் அமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More