ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினை நோக்கிச் சென்ற படகு ஒன்று காணாமல் போயுள்ளது.
ஸ்பெயினின் கெனரி (Canary) தீவுகளை நோக்கிச் சென்ற அந்தப் படகில் குறைந்தது 200 பேர் இருந்ததாகவும் அவர்களின் ஏராளமான சிறுவர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் செனகல் (Senegal) நாட்டில் இருந்து ஸ்பெயினை நோக்கி கடந்த மாதம் 27ஆம் திகதி அந்தப் படகு புறப்பட்டுள்ளது. எனினும், குதித்த படகு தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஆண்டு அதுபோல் ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினுக்கு சாதாரண மீன்பிடிப் படகுகளில் செல்ல முயன்றவர்களில் சுமார் 560 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.