ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 12 வயதுச் சிறுமி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அச்சிறுமி, 37 வயதுப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தப் பெண் ஒரு வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என்று The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சிறுமி, இளம் குற்றவாளிகளுக்கான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை முறையற்றது என்று சிறுமியின் சட்டத்தரணி தெரிவித்தார்.
அவர் தொடர்புத் திறன் குறைபாடு, ADHD மற்றும் பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
சிறுமியின் நிலையை மதிப்பிட மேலும் பரிசோதனைகள் நடைபெறும் என்று The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.
எதிர்வரும் 24ஆம் திகதி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.