Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஏமனில் மீண்டும் தாக்குதல்

அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஏமனில் மீண்டும் தாக்குதல்

0 minutes read

அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஏமனில் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹௌதி கிளர்ச்சியாளர்களின் நிலத்தடிக் கிடங்கை நேற்று (ஜனவரி 22) நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறிவைத்தன.

செங்கடலில் ஹௌதி குழு தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் ஏவுகணைகள், வேவுச் சாதனங்கள் ஆகியவையும் குறிவைக்கப்பட்டன.

இஸ்ரேல், காஸா மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் பாலஸ்தீனர்களுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹௌதி குழு குறிப்பிட்டது.

அதனால் அனைத்துலகக் கப்பல் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலகப் பணவீக்கம் பற்றிய அச்சமும் நிலவுகிறது.

ஆஸ்திரேலியா, பஹ்ரேன், கனடா மற்றும் நெதர்லந்து ஆகிய நாடுகளின் ஆதரவோடு அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஏமனில் 8 தாக்குதல்களை நடத்தின.

6 நாடுகளும் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல்கள், சுய-தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக இங்கிலாந்து தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

மூலம் : Reuters

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More