Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா தேவையற்ற செலவினங்களை குறைக்க பாகிஸ்தானில் புதிய தடை உத்தரவு

தேவையற்ற செலவினங்களை குறைக்க பாகிஸ்தானில் புதிய தடை உத்தரவு

1 minutes read

கடுமையான நிதி நெருக்கடியை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.

இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புதிய தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது, அரச விழாக்களில் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புஅளிக்கப்படுவது முக்கிய சம்பிரதாய நடவடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், இந்த நடவடிக்கை பிரதமருக்கு அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து பாகிஸ்தான் அமைச்சரவை பிரிவு விவரித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் மூத்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் சிவப்புக் கம்பளம் பயன்படுத்தப்படக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும், வெளிநாட்டுத் தூதர்கள் பாகிஸ்தானுக்கு வரும்போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை அளிக்கும் வகையில், ஒரு நெறிமுறையாக சிவப்புக் கம்பளங்களைப் பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற செலவினங்களை குறைத்து, அந்த நிதியை முக்கிய நிர்வாக நடவடிக்கைகளுக்கு திருப்பிவிடும் முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிக்கன நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் தானாக முன்வந்து தங்களது சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட கடந்த வாரம் முடிவெடுத்தனர்.

சிக்கன நடவடிக்கைகளே அரசின் முதன்மையான முன்னுரிமை நடவடிக்கை என்று பாகிஸ்தான் பிரதமர் ஏற்கெனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More