இங்கிலாந்து – மான்செஸ்டரில் (Manchester) 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் மற்றொரு 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (15) மாலை 4:30 மணியளவில், Moss Side, Monton வீதியில் , கத்திக் குத்து காயங்களுடன் சிறுவன் கண்டெடுக்கப்பட்டான்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் (GMP) தலைமை கண்காணிப்பாளர் டேவிட் மீனி கூறுகையில், “இந்தத் துயரமான மற்றும் மனதை வருத்தும் சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். மேலும், இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் சிறப்பாகப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள்” என்றார்.
அத்துடன், “இந்தச் சம்பவம் சமூகத்திலும் சுற்றியுள்ள பகுதியிலும், குறிப்பாக அதைப் பார்த்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
இப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை, “பிரிவு 60” உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினருக்கு மக்களை நிறுத்தி சோதனை செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது.
தகவல் தெரிந்த சாட்சிகள், பொலிஸாரை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.