இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயது யுவதி ஒருவர், இங்கிலாந்தின் வெஸ்ட்மிட்லாண்ட்ஸ் பகுதியில் பாலியல் பலாத்கராம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த அந்த யுவதி, ஓல்ட்பரி பகுதியில் வசித்து வந்துள்ளார். சம்பவ தினதில் அந்த பெண்ணை 30 வயது வெள்ளையின இளைஞர் ஒருவர் இன ரீதியாக இந்திய பெண் என்பதால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த பெண் மன உளைச்சலுடன் தெருவில் அமர்ந்திருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வால்சாலின் பார்க் ஹால் பகுதிக்கு பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவர் பெண்ணின் வீட்டுக் கதவை உடைத்து, அத்துமீறி உள்ளே சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பொலிஸார் சேகரித்தனர். இதில் கருப்பு நிற உடை அணிந்து வந்த இளைஞர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அவரின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.