இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள கார்டின்ஹாம் கிராமத்தில், கடந்த 50 நாட்களாக நிலவிய மழை காரணமாக கடந்த ஆண்டு டிசெம்பர் 30 முதல் 441.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதன் அளவு வழக்கமான மழை அளவைக் காட்டிலும் அதிகமாகும். குறிப்பாக, ஸ்காண்டிநேவியாவில் பெரும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகளிலும் இந்த மாதத்தில் வழக்கத்திற்கு மேலான மழை பெய்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிறுவனம் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு 67 வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில், இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் பல பகுதிகளுக்கு குளிர் தொடர்பான சுகாதார எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.