9
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் தமது இரங்கல் உரையினையும் பதிவு செய்து வருகின்றனர்.
ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் அவர்கள் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் உருவ படத்திற்கு அஞ்சலிசெலுத்தி பதிவேட்டில் இரங்கல் உரை எழுதிச் சென்றார்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் தமது இரங்கல் உரையினையும் பதிவு செய்து வருகின்றனர்.இந்த நிகழ்வில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
