Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புகையிரதநிலையத்தில் அமர்ந்திருந்த முதியவரின் விபரீத செயல்…..

புகையிரதநிலையத்தில் அமர்ந்திருந்த முதியவரின் விபரீத செயல்…..

1 minutes read

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று (13) நண்பகல் 1.00 மணியளவில் இந்த விபரீதம் இடம்பெற்றது.

புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமர்ந்திருந்த இந்த முதியவர் கடுகதி புகையிரதம் வந்த வேளை, ஓடிச் சென்று தனது தலையைக் கொடுத்து இறந்துள்ளார்.

தலை சிதறிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்த வயோதிபர் யார் என்ற எந்தவித தகவலும் அற்ற நிலையில், தலை சிதறிய நிலையில் முதியவரின் சடலம் புகையிரத காப்பாளர்களினால் , புகையிரதத்தில்ஏற்றிச் செல்லப்பட்டது.

விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More