யாழ் மருத்துவ பீட மாணவி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பண்ணை கடற்கரையில் குறித்த பல்கலைக்கழக மாணவி கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது சடலம் நீரில் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மாணவியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் தீடிரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலைசெய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியை கொலைசெய்துவிட்டு,கொலையளி தப்பிச்சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.