Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன!

1 minutes read

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயலாளராக தயாசிறி ஜயசேகரவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு கூட்டம் அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்திலேயே மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை தலைவர் மற்றும் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்கள் மூவரும் அதே பதவியில் அங்கம் வகிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ ஆகியோர் குறித்த பதவிக்கு மீண்டும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொருளாளராக மீண்டும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு கட்சியின் தேசிய அமைப்பாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More