செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னார் கடற்கரைக்கு அருகாமையில் சிதைவடைந்த நிலையில் சடலம்!

மன்னார் கடற்கரைக்கு அருகாமையில் சிதைவடைந்த நிலையில் சடலம்!

0 minutes read

மன்னார்- தாழ்வுபாடு கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியில், சிதைவடைந்த நிலையில் சடலமொன்றை மன்னார் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு நேற்று (திங்கட்கிழமை) தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை கண்டெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வந்த சட்ட வைத்திய அதிகாரி, சடலத்தை பார்வையிட்டதோடு, உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ள மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த சடலம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் தொடர்பாக இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.