Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் யானை முத்துக்களுடன் மூவர் கைது!

வவுனியாவில் யானை முத்துக்களுடன் மூவர் கைது!

1 minutes read

வவுனியாவில் யானை முத்துக்களுடன் சந்தேகநபர் மூவரை, முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா நகரில் யானை முத்துக்களை விற்பனை செய்யும் நோக்குடன் வந்த மூவரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து நான்கு யானை முத்துக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல், மாகாவ மற்றும் நிக்கவரெட்டிய பிரதேசங்களை சேர்ந்த 53, 30 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட யானை முத்துக்கள் நான்கும், வவுனியா பொலிஸாரிடம் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More