ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக தனியார் ஊடக வலையமைப்பு வெளிப்படுத்திய குற்றச்சாட்டில் தானோ அல்லது தனது குடும்ப அங்கத்தவர்களோ தொடர்பில்லையென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். தாம் கேள்விப்படாத இரு நிறுவனங்களுக்கிடையில் இடம்பெற்ற பரிவர்த்தனை தொடர்பில் தமது குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக அம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணிகளில் இடம்பெற்றுள்ள கொடுக்கல் வாங்கல் மோசடிகளில் தாமோ அல்லது தமது குடும்பத்ததில் எவரும் சம்பந்தப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.