December 3, 2023 11:37 am

அரசை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே வழி! – சஜித் தெரிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“இலங்கையில் நீதித்துறை சுதந்திரத்தை இழந்துவிட்டது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி வேண்டுமெனில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே வழி.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அன்று பிரதம நீதியரசர் ஷிராணியை வீட்டுக்கு அனுப்பினார்கள் ராஜபக்ஷக்கள். இன்று நீதிபதி சரவணராஜாவை நாட்டைவிட்டு வெளியுள்ளார்கள் ரணில் – ராஜபக்ஷக்கள்.

இப்படியான ஆட்சியாளர்கள் தேவையா என்பதைப் நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த அரசு நீடித்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்க்கவே முடியாது.

எனவே, ஆட்சி மாற்றத்துக்கான பயணத்தில் சகல மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்