செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுணதீவில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் வெடிக்கவைத்து அழிப்பு

வவுணதீவில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் வெடிக்கவைத்து அழிப்பு

1 minutes read

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை செவ்வாய்க்கிழமை (14)  நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினரால்  வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வயலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) வேளாண்மை நடவடிக்கைக்காக வயலின் உரிமையாளர் உழவு இயந்திர மூலம் நிலத்தை பன்படுத்தும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

இதையடுத்து பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள், ஒரு ஆர்.பி.ஜி. குண்டு, மற்றும் பிளாஸ்டிக் கான் ஒன்றில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களை  ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் வைத்து வெடிக்க வைத்து அழித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் கடந்த காலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More