செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயர்தரப் பரீட்சை சிக்கல்கள் தொடர்பாக அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள்

உயர்தரப் பரீட்சை சிக்கல்கள் தொடர்பாக அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள்

1 minutes read

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக, ஏதேனும் சிக்கல்நிலை இருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கங்களான 1911 அல்லது 0112 78 45 37, 0112 78 66 16 மற்றும் 0112 78 42 08 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், 0112 78 44 22 என்ற தொலைநகல் இலக்கம் மூலமாகவோ அல்லது பரீட்சை திணைக்களத்தின் http://gcealexam@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்க முடியும் என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் எதுவும் சேதமடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More