Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவகம்; 26ஆம் திகதி திறப்பு

மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவகம்; 26ஆம் திகதி திறப்பு

0 minutes read

சென்னை, மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவகம், 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி இந்திய ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.

கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையிலும் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்ததை நினைவு கூறும் விதமாகவும் கருணாநிதி நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவகத்தின் முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More