கென்யாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கட்டுக்கடங்காத வெட்டுக்கிளிகள், பயிர்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து படையெடுத்து வரும் இந்த பூச்சிகள், விவசாய நிலங்களை அழித்து, ஏற்கனவே பஞ்சம் வறட்சியில் இருக்கும் அந்த பிராந்தியத்தை மேலும் அச்சுறுத்தி வருகின்றன.
சராசரியாக மனித விரல் உயரத்திற்கு வளர்ந்திருக்கும் இந்த பூச்சிகள், கூட்டம் கூட்டமாக வருவதால் விவசாயிகள் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.