யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார், பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த ஜோன் திரவியம் குமரசேன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மறுநாள் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மூளைக் காய்ச்சல் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.