கொழும்பு, தெமட்டகொடை ரயில் நிலையத்தில் காணாமல்போன ரயில்வே ஊழியர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்த வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொடை ரயில் நிலையத்தில் கடமையாற்றிய மாத்தறையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில், போதிய தேடுதல் பணிகள் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்து தெமட்டகொடை ரயில் நிலையப் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக நேற்றுக் காலை புறப்படவிருந்த உடரட்ட மெனிக்கே மற்றும் பொடிமெனிக்கே ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் பல ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டிருந்தன.