செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிலாபம் கடற்கரையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

சிலாபம் கடற்கரையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

0 minutes read

புத்தளம் – சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரைப் பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி 4 அங்குலம் உயரமுடைய வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வயோதிபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.