நடிகர் சூர்யா அடுத்து, அருவா, வாடிவாசல் ஆகிய 2 புதிய படங்களில் நடிக்க உள்ளார். அருவா படத்தை ஹரி இயக்குகிறார். ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.
சூர்யா- ஹரி கூட்டணியில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன. வேல் படத்தை போலவே அருவா கிராமத்து கதையம்சத்தில் தயாராகிறது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகி வரும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சூர்யா தந்தை, மகனாக இருவேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அருவா படத்தை முடித்து விட்டு வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் திரைக்கு வந்த அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.