செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு எடின்பரோ முதல் கிளிநொச்சி வரை: தாயார் பயின்ற பாடசாலைக்கு மகன் வழங்கிய கல்வி அறக்கொடை!

எடின்பரோ முதல் கிளிநொச்சி வரை: தாயார் பயின்ற பாடசாலைக்கு மகன் வழங்கிய கல்வி அறக்கொடை!

1 minutes read

தலைமுறைகள் மாறினாலும் தாய்ப்பாடசாலை மீதான பற்று மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில், கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான திருமதி கலாராணி ராஜ்குமார் அவர்களின் புதல்வர் ராகுல் ராஜ்குமார், தனது தாயார் கல்வி கற்ற பாடசாலைக்கு ஓர் உன்னதமான கல்விசார் அறக்கொடையை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் ராகுல் ராஜ்குமார், எடின்பரோ மரத்தான் (Edinburgh Marathon) ஓட்டத்தில் பங்கேற்று, அதன்மூலம் திரட்டிய நிதியை, ‘Kili People’ அமைப்பின் ஊடாக இக்கொடைக்காகப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த நிதியின் மூலம் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமான நிழற்படப்பிரதி (Photocopier) இயந்திரம் மற்றும் வர்ண அச்சுப்பொறி (Color Printer) ஆகிய நவீன உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வுபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது. ராகுல் ராஜ்குமாரின் பெரிய தாயாரும், முன்னாள் ஆசிரியையும் ஓய்வுநிலை அதிபருமான திருமதி லோ.ஜெயராணி அவர்கள் கலந்துகொண்டு, இவற்றை முறைப்படி பாடசாலையிடம் ஒப்படைத்தார்.

தனது தாயார் கல்வி பயின்ற கல்விக்கூடத்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் உயரிய நோக்குடன் ராகுல் ராஜ்குமார் மேற்கொண்ட இந்தச் செயல், இன்றைய கால இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகிறது.

இவரின் இந்தத் தன்னலமற்ற சேவையையும் உயர்ந்த பண்பையும் பாராட்டிய கிளிநொச்சி இந்துக் கல்லூரிக் குடும்பம், ராகுல் மற்றும் Kili People அமைப்புக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.

கல்விப் பணியில் மாணவர்களுக்குப் பேருதவியாக அமையவுள்ள இந்த அறக்கொடை, பாடசாலையின் வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான பதிவாக இணைந்துள்ளது.

எடின்பரோ முதல் கிளிநொச்சி வரை: தாயார் பயின்ற பாடசாலைக்கு மகன் வழங்கிய மகுடமான கல்வி அறக்கொடை!

எடின்பரோ முதல் கிளிநொச்சி வரை: தாயார் பயின்ற பாடசாலைக்கு மகன் வழங்கிய மகுடமான கல்வி அறக்கொடை!எடின்பரோ முதல் கிளிநொச்சி வரை: தாயார் பயின்ற பாடசாலைக்கு மகன் வழங்கிய மகுடமான கல்வி அறக்கொடை!

எடின்பரோ முதல் கிளிநொச்சி வரை: தாயார் பயின்ற பாடசாலைக்கு மகன் வழங்கிய மகுடமான கல்வி அறக்கொடை!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.