Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகிசு கிசு சுஷாந்த் சிங் மரணத்துக்கு நான் காரணம் | கதறும்பாலிவுட் நடிகை

சுஷாந்த் சிங் மரணத்துக்கு நான் காரணம் | கதறும்பாலிவுட் நடிகை

1 minutes read

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தற்கொலை குறித்து பொலிசார் இதுவரை 40 பேரிடம் விசாரணை செய்து உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுஷாந்த் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பீகாரில் ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த வழக்கு வரும் 5ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

சுஷாந்தின் மன அழுத்தத்திற்கு ரியா தான் காரணம் என்றும், சுஷாந்துக்கு அவர் நெருக்கடி கொடுத்ததோடு ஒரு கட்டத்தில் மிரட்டியுள்ளதாகவும் மன உளைச்சலில் சிகிச்சை எடுத்து கொண்டிருந்த சுஷாந்தை தனியே விட்டு அவர் பிரிந்து சென்றது மட்டுமின்றி அவரிடம் இருந்த அனைத்து பொருட்களையும் ரியா கைப்பற்றி உள்ளார் என்றும், சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து ரியாவின் வங்கி கணக்கிற்கு 15 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் ஆகி இருப்பதாகவும் சுஷாந்தின் தந்தை தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து ரியா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கடவுள் மீதும் நீதியின் மீது நம்பிக்கை உண்டு என்றும் தான் இந்த பிரச்சனையில் இருந்து நிச்சயம் மீண்டு, வெளியே வருவேன் என்று நம்புவதாகவும் நீதி தனக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More