அமைதியின்மைக்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய எலைட் பொலிஸ் பிரிவு, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகளைக் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரங்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்வை சமூக ஊடகங்களில் கண்காணிக்கும் பணியை பொலிஸ் அதிகாரிகள் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : புகலிடம் கோருவோர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே போராட்டம்; 6 பேர் கைது!
சிறிய படகுகள் நெருக்கடி அதிகரித்து வருவதால், இங்கிலாந்து முழுவதிலுமிருந்து துப்பறியும் நபர்கள் ஒரு புதிய புலனாய்வுப் பிரிவில் பங்கேற்கின்றனர்.
உள்துறை அலுவலகத்தால் மேற்பார்வையிடப்படும் இந்தப் பிரிவு, “சமூக ஊடக உளவுத்துறையை அதிகப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டிருக்கும்.
குடியேற்றம் குறித்து மக்கள் கொண்டிருக்கும் “உண்மையான கவலைகளை” நிவர்த்தி செய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், கடந்த வாரம் அமைச்சரவையை எச்சரித்தார்.
ஆனால், தேசிய இணைய புலனாய்வுக் குழுவின் விமர்சகர்களால் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் “தணிக்கை மீதான வெறி” கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.