செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வெயில் கால நோய்களும்…. மாணவர்கள் தற்காத்து கொள்ளும் வழிகளும்…

வெயில் கால நோய்களும்…. மாணவர்கள் தற்காத்து கொள்ளும் வழிகளும்…

1 minutes read

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அம்மை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அம்மை உள்ளிட்ட வெயில் நோய் வராமல் பாதுகாக்க செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது:-

பொதுவாக பருவமழை காலத்தை தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் குளிர்காலங்களாகும். மார்ச் மாதம் இறுதி நாளில் கோடை வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திற்கு இணையாக சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக உடலில் ஏற்படும் மாறுதல்களால் பலருக்கு அம்மை நோய் தாக்க வழியுள்ளது. அம்மை நோய் வருவதற்கு முன்பே காய்ச்சல், தலைவலி, உடல் வலியால் அவதிப்படுவர். அதன் பின்னர்தான் அம்மை போட்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியும்.

மேலும் அம்மை நோயானது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டால், தொடர்ந்து அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

இது வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடியது என்பதால் சுலபமாக காற்றிலேயே மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

எனவே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அம்மை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

அதிகளவு தண்ணீர் அருந்துவது, தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, கனிகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க குளிர்ச்சியான பழம் மற்றும் சத்து, ஆரோக்கியமான உணவுகள் ஆகியவற்றை வழக்கத்தை விட வழங்குவதுடன் கட்டாயப்படுத்தி சாப்பிட வலியுறுத்துவதன் மூலம் அம்மை நோய்க்கு எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் எளிதில் அம்மை நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக வைரஸ் என்னும் அதிகளவு கிருமிகளால் பாதிக்காத வகையில் அம்மைநோயைக் கட்டுப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார்.

அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின்கள் அதிகமுள்ள உணவை சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சத்தான இளநீர், கரும்பு சாறு, பதநீர், பழசாறு, குளிர்ச்சியான உணவு பதார்த்தங்கள், கேப்பை கூழ், கம்பங்கூழ், எளிதில் ஜீரணமாக கூடிய உணவு வகைகளை அதிகம் குடிக்க வேண்டும்.

இவைகளை முறையாக கடைபிடித்தாலே அம்மை சரியாகி விடும். அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தழும்பு, எரிச்சல் இல்லாமல் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த பல வகை மருந்துகள் தற்போது வந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.