17
சிக்குண்ட பாறைநடுவே
வெடித்தஎரிமலை
குழம்பாற்றை போல்
என்தேச சந்ததியின்
குருதியுறைந்த மணல்
வெள்ளத்தே மிதித்து
கடந்த பீரங்கிகளும்
கொன்று குவித்த
தோட்டாக்களும்
பல வடிவங்களில்
அங்கே வெடித்து
சிதறிய குண்டுகள்
ஒட்டிய குருதியுடன்
பல் துண்டுகளாய்
செந்நிற மின்குமிழ்களாய்
ஒளிர்கிறது
உயிர்காக்க தோண்டிய
பதுங்குகுழியில் விளையாடிய
என் தம்பி தங்கை மீது
குண்டெறிந்து புதைகுழியாகியவன்
சொல்கிறான் கேளுங்கள்
வெள்ளை ஆடையோடு
உள்ளிருந்தவன் புலியென
கேசுதன்