இண்டெக்ஸ் இலக்கமும்
எடுக்கின்ற பெறுபேறும்
பிறப்பதற்கு முன்பே
பிரிண்ட் ஆகி விட்டன
வெற்றி பெறுவதும்
முட்டித் தோற்பதும்
முற்று முழுதாக
முடிவாகி விட்டது
ஜீவன் பிரிய வேண்டிய
ஜி பி எஸ் லொகேஷனும்
ஜி எம் டி நேரமும்
ஏற்கனவே ஏட்டில்
எழுதப் பட்டு விட்டன.
இப்போது நடப்பது
எழுதப்பட்டவையே.
தப்பிப் போனதற்காய்
தவித்துத் துடிப்பதிலும்
எப்படி என் திறமை
என்று துள்ளுவதிலும்
அர்த்தமே இல்லை
ஆராய்ந்து பார்த்தால்…!
எழுதியதே நடந்தது.
இல்லை என்று சொன்னால்
இறைவனே இல்லை என்று
இறுதியில் கருத்து வரும்
நாளை நடப்பவற்றை
நாயன் அறிவானா?
இல்லை என்று சொன்னால்
இறை அறிவைத் தாழ்த்துகிறார்.
ஆம் என்று சொன்னால்
அதுதான் விதி.
விதி போட்டுத் தந்த
வீதியிலே நடக்கின்றோம்
எது நடந்தாலும்
இறைவனின் நாட்டமே.
நன்றி : Mohamed Nizous | tamilcnn.lk
