இந்த தியானத்தால் மணிபூரகச் சக்கரம் நல்ல பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. அதனால் சிறுகுடல், பெருங்குடல் நல்ல சக்தி பெற்று இயங்கும். நடுமுதுகு வலி வராமல் வாழலாம்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் உங்களது மனதை வயிற்று உள் பகுதியில் தியானிக்கவும். நல்ல பிராண சக்தி வயிற்று உள் பகுதி முழுவதும் கிடைப்பதாக எண்ணி ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.
இந்த தியானத்தால் மணிபூரகச் சக்கரம் நல்ல பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. அதனால் சிறுகுடல், பெருங்குடல் நல்ல சக்தி பெற்று இயங்கும். நடுமுதுகு வலி வராமல் வாழலாம்.
நேயர்களே முத்திரை, யோகாசனம், தியானம் தினமும் பயின்று கழுத்து,முதுகு, நடு முதுகு, அடி முதுகு, இடுப்பு வலி வராமல் வாழுங்கள்.
நன்றி | மாலை மலர்