சிரிய ஜனாதிபதி பஷார் அல் –- அஸாத், தனது இரசாயன ஆயுதங்களை கையளிப்பாராயின் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை அவரால் தடுக்க முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆனால் அஸாத் அந்த ஆயுதங்களை கையளிப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை என அவர் கூறினார்.
இராணுவ தாக்குதலொன்றை தடுப்பதற்கு சிரியாவுக்கு தற்போது ஏதாவது வாய்ப்பு உள்ளதா என ஜோன் கெரியிடம் வினவப்பட்ட போதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார்.
‘‘நிச்சயமாக அஸாத் எதிர்வரும் வாரத்தில் தனது இரசாயன ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் தாமதமின்றி முழுமையாக கையளிப்பாராயின் தாக்குதலை தவிர்த்துக் கொள்ளமுடியும்” என கெரி கூறினார்.