Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து கடும் போக்கு இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து கடும் போக்கு

இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து கடும் போக்கு இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து கடும் போக்கு

1 minutes read

நியூ­யோர்க்கில் ஐ.நா. பொதுச்­ச­பையின் 68 ஆவது அமர்­வுக்கு இணைந்த வகையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற பொது­ந­ல­வாய உறுப்பு நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்­களின் சந்­திப்பின் போது இலங்கை விவ­காரம் குறித்த தனது அபிப்­பி­ரா­யங்­களை கனடா ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைத்­துள்­ளது.

இலங்­கையில் மனித உரிமை பேணப்­படும் விட­யத்தில் முன்­னேற்­ற­மெ­துவும் காணப்­ப­டாத சங்­க­ட­மான நிலை மற்றும் மாலை­தீவில் காணப்­பட்டு வரும் அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யற்ற நிலை ஆகிய விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­ட­வென அமைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சந்­தர்ப்­ப­மொன்­றா­கவே இச்­சந்­திப்பு அமைந்­துள்­ளது.

பொது­ந­ல­வாய  அமைப்பின் மூலா­தா­ர­மாக விளங்கும் விழு­மி­யங்கள் மற்றும் குறிக்­கோள்­களை மீறும் வகையில் இலங்கை செயற்­பட்டு வரு­வது குறித்து பொது­ந­ல­வாய அமைப்பு அதி­கூ­டிய ஈடு­பாடு காட்ட வேண்­டு­மென கனடா திரும்பத் திரும்ப அறை­கூவல் விடுத்த வண்­ண­மே­யுள்­ளது.

இது குறித்து கனே­டிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் பார­தூ­ர­மான முறையில் இழைக்­கப்­பட்­டுள்ள போர்க்­குற்­றங்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான பொறுப்­புக்­கூறும் கடப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தாமை குறித்த எமது விச­னங்கள், தமிழ் சமூ­கத்­தி­ன­ரு­ட­னான நல்­லி­ணக்க செயற்­பா­டின்மை, உள்­நாட்டு யுத்தம் முடி­வுற்ற காலம் தொட்டு இன்­று­வரை இடம்­பெற்­றுள்ள விரும்­பத்­த­காத நிகழ்­வுகள் உள்­ளிட்ட மனித உரி­மைகள் மீறப்­பட்டு வரும் விவ­காரம் குறித்து இன்று மீண்டும் நான் உரத்த தொனியில் தெட்டத் தெளி­வுற எடுத்­து­ரைத்தேன்.

பிர­தமர் ஸ்டீபன் ஹார்பர் தெளி­வான முறையில் தெரி­வித்­துள்­ள­வாறு இந்த விவ­காரம் குறித்த எமது விச­னங்­களை இலங்கை அர­சாங்கம் அலட்­சி­யப்­ப­டுத்­தாத வகையில் செயற்­பட வேண்­டு­மென்றே நாம் எதிர்­பார்க்­கின்றோம். இலங்­கையில் தற்­போ­தைய நிலை­வ­ரங்கள் மற்றும் இன்று வரை­யிலும் உண்­மை­யான முன்­னேற்­ற­மெ­துவும் காணப்­ப­டாமை ஆகி­யன நில­வாத நிலையில் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் முழு­மை­யான அளவில் பங்­கேற்­ப­தென்­பது கனே­டிய அர­சுக்கு கடி­ன­மா­ன­தா­கவே இருக்கப் போகின்­றமை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னதே எனக் குறிப்­பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More