0
பொது நலவாயத் தலைவர்களிடம் ஆவணமொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன் பால் அவ்வாவணத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது கண்மூடித்தனமாக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மற்றும் பொதுநலவாய மாநாட்டைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புறக்கணிப்பதற்கான காரணம் ஆகியவற்றை உள்ளடக்கவிருப்பதாக அக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.