இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசகர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ரி.என். செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழர் நலனுக்கான நடவடிக்கைகளை இந்தியா தொடர முடியும் என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடமாகான முதலமைச்சரின் இந்த நடவடிக்கையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டுக்கு செல்லும் பிரிட்டன் பிரதமர் கமரூன், யாழ்ப்பாணத்திற்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. அவரைப்போல மன்மோகன் சிங்கும் யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் சீனா, பாகிஸ்தான் உடனான நட்பை இலங்கை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசகர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இணையத்தளங்களில் அண்மையில் பரவலாக உலாவரும் மேலுள்ள கேலிச்சித்திரம் பல வினாக்களுக்கு விடைதருகின்றது.