உலகில் பலநாடுகளில் தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஈழத்தமிழர்கள் இவ்வாண்டும் இப்பண்டிகையில் அதிக நாட்டமில்லாது இருக்கின்றார்கள். கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இசைப்பிரியாவின் செய்திகளும் கானோளிகளும் ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது உலகத்தமிழர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழர்களுடன் கலந்துவிட்ட இந்த தீபாவளி பண்டிகையில் அவலப்படும் ஈழத்தமிழரின் வாழ்வுக்கு பாதுகாப்பும் அமைதியும் சுதந்திரமான வாழ்வும் கிடைக்கப்பெற வணக்கம் லண்டன் வேண்டிகொள்கின்றது.