பொதுநலவாய அரச தலைவர்கள் மாநா ட்டின் ஆரம்ப வைபவம் இன்று காலை 10 மணியளவில் கொழும்பு தாமரை தடாகத்தில் ஆரம்பமானது. அந்தவகையில் இன்று ஆரம்பமான அரச தலைவர்கள் மாநாடு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணிவரை நடைபெறும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா மற்றும் பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் மற்றும் விசேட பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போர்ட் ஆகியோர் உரையாற்றpனர்.
பொது நலவாய அமைப்பானது தண்டனை வழங்கும் அமைப்போ அல்லது தீர்ப்பு வழங்கும் அமைப்போ அல்ல. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை. தற்போது பிரதான மனித உரிமையான வாழும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் சகவாழ்வு மற்றும் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.