Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்புதமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு

தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்புதமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு

2 minutes read

திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரை வடக்கில் குடி­ய­மர்த்­து­வ­தற்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தி­யி­லுள்ள மக்­களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­கரன் குற்றம் சாட்­டி­யுள்ளார்.
சம்­பவ இடத்­திற்கு நேர­டி­யாகச் சென்ற அவர் நிலை­மை­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,

ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தியில் செம்­பி­யன்­குளம், கரு­வேப்­ப­மு­றிப்­புக்­குளம் ஆகிய பிர­தே­சங்­களை அண்­டிய வயல் நிலங்­களும் மேட்­டுக்­கா­ணி­யுடன் தோட்டப் பயிர்ச் செய்கை நிலங்­களும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஒதி­ய­மலை கிரா­மத்தில் திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரைக் குடி­யேற்­று­வதை நாம் பல்­வேறு தடை­க­ளுக்கு மத்­தியில் நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்ளோம்.
அப்­ப­கு­தியில் வாழ்ந்த எமது தமிழ் மக்­களின் குடி­யி­ருப்பு வீடுகள் அத்­தி­பா­ரத்­துடன் குழி­தோண்டி எடுக்­கப்­பட்­டுள்­ளது. எமது மக்கள் அங்கு வாழ்ந்­த­தற்­கான சான்­று­க­ளாக கற் கிண­று­க­ளையும் மரத்­தோப்­புக்­க­ளையும் மட்­டுமே நாம் தற்­பொ­ழுது காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. மேலும் அப்­ப­கு­தியில் பழைய பாதை அகற்­றப்­பட்டு தென் பகு­தி­யி­ன­ருக்குக் குடி­யேற்­று­வ­தற்கு வச­தி­யாக குடி­யேற்றக் காணி­க­ளுக்கு இடையே ஒரு பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தியில் அதி­க­மான எல்லைக் கட்­டை­களும் நாட்­டப்­பட்­டுள்­ளன. இதே­போல்­அப்­ப­கு­தியில் காடுகள் பெரு­ம­ளவில் அழிக்­கப்­பட்டு புதிய சிங்­களக் குடி­யேற்றம் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.
ஒதி­ய­மலை கிராம அலு­வலர் பிரி­வுக்­குட்­பட்ட , பழைய கொம்­பனித் தெரு என்ற பகு­தி­நோக்கி செல்­லும்­போது வெலி ஓயா பகு­திக்குள் இடம்­பெறும் சிங்­க­ளக்­குடி திணிப்­புக்கள் போன்று குடி­யேற்­றங்கள் துரி­த­க­தியில் நடை­பெ­று­வ­தைக்­கண்டு அதிர்ச்­சி­யுற்றேன்.அங்கு புதி­தாக பாட­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. புல்­டோசர் மூலம் புதிய பாதைகள் அமைக்­கப்­படும் பணி இடம்­பெ­று­வதை நேரில் கண்டேன். தமிழ்ப்­பெ­யர்கள் மாற்­றப்­பட்டு புதி­தாக சிங்­கள பெயர்ப்­ப­ல­கைகள் வைக்­கப்­பட்­டுள்­ளன .

புதிய வீடுகள் கட்­டப்­ப­டு­வ­தற்­கான அடிக்­கல்­களும் நாட்­டப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மின்றி அப்­ப­கு­தி­க­ளுக்கு மின்­சார வச­தியும் பூர­ண­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. முதலில் தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய சிலோன் தியேட்டர்ஸ் பகு­தியில் தற்­போது சிங்­கள மக்கள் பயன்­ப­டுத்­து­வ­தையும் நேரில் அவ­தா­னித்தேன். ஒதி­ய­மலை வாசி­க­சா­லை­யி­லுள்ள எங்கள் மக்­க­ளிடம் அங்கு இடம்­பெறும் நில, வள அப­க­ரிப்­புக்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன்.
பின்னர் ஒதி­ய­ம­லைப்­ப­டு­கொலை இடம்­பெற்ற பகு­திக்கு சென்­ற­போது அச்­சம்­பவம் தொடர்பில் மக்கள் என்­னிடம் வேத­னை­யுடன் விப­ரித்­தனர். அக்­கட்­டடத்­தி­னுள்ளே 28 தமிழ்­மக்கள் சுட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தையும் மேலும் 5 பேர் அரு­கி­லி­ருந்த காட்­டுப்­ப­கு­தியில் டிராக்டர் வண்­டி­யுடன் சேர்த்து எரிக்­கப்­பட்­ட­தையும் அவர்­களின் நினைவு நாளையே அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நினைவு கூர்­வ­தா­கவும் கூறினர். இம்­முறை அந்த நினைவு நாளில் நீங்கள் அவர்­களை நினைவு கூர துணை­யி­ருப்போம் என்றோம்.
அதன் பின்னர் ஒதி­ய­மலை பிள்­ளையார் கோயி­லுக்கு வந்து பூஜை­களில் கலந்து கொண்­ட­போது 89 வய­து­டைய நாக­மணி சின்­னத்­தம்­பி­யிடம் சில தர­வு­களை சேக­ரிக்க முடிந்­தது. அங்கு அவர் சுமார் 4 தலை­மு­றைக்கு மேல் வாழ்ந்து வரு­வ­ தா­கவும் ஒதி­ய­மலை தமி­ழரின் பூர்­வி­கக்­கி­ராமம் எனவும் , டொலர் பாம், கென்பாம் ஆகிய பகு­தி­க­ளுக்கு அண்­மித்த நவா­லயம், சிவா­லயம் உள்­ளிட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் தமி­ழ­ருக்­கு­ரி­யவை என்றும், தற்­போது பிள்­ளையார் கோயி­லுக்கு அருகில் வரை சிங்­களக் குடி இருப்­புக்கள் வந்­து­விட்­டன என்று வேத­னை­யுடன் விப­ரித்தார்.
ஒட்­டு­மொத்­த­மாக மக்­க­ளிடம் தரவுகளை சேக­ரித்த, நான் நேரில் கண்டு கொண்ட தர­வு­க­ளின்­படி இடப்­பெ­யர்­வுக்கு முன் எங்கள் மக்­களின் பாவ­னை­யி­லி­ருந்த சுமார் 700 ஏக்கர் நிலப்­ப­கு­தியும் காடு­க­ளாக இருந்த சுமார் 2 ஆயி­ரத்து 500 ஏக்கர் நிலப்­ப­கு­தியும் இன்று துரி­த­க­தியில் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.
இவைகள் யாவும் ஒதி­ய­மலை பிர­தேசச் செயலர் பிரிவுக்குட்பட்டவை.

“காரவாய்க்கால் ,வேலங்குளம், நெடுங்கேனியான் முறிப்பு ஆகிய தமிழ்ப்பெயர்கள் ஏதும் இப்போது அங்கே இல்லை. அதாவேடுனுவேவ, கலியானபுர உள்ளிட்ட பல சிங்களப்பெயர்கள் இப்போது போதிதாக முளைத்துள்ளன. மேலும் தற்போது வயல் செய்து கொண்டிருக்கும் பகுதியில் , ஓதியமலைக்குளம் தாண்டி செல்லும்போது ராணுவத்தினர் தம்மை தாக்குவதாகவும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அங்கு இடம்பெறும் நில,வள அபகரிப்புக்கள் பற்றி உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தேன் என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More