
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது.

இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.
யாழ் விமான நிலையம் தேர்தலை மையமாக கொண்டு அவசர அவசரமாக அமைக்கப்பட்டது. இது தமிழர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளவே என்ற என்ற விமர்சனம் தற்போது எழுந்திருக்கின்றது.

இதேவேளை நாடுமுழுவதும் பலத்த மழை பெய்து வருவதனால் வெள்ளம் வருவது சாதாரண விடயம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் கனமழை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரு விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியமையும் குறிப்பிடத்தக்கது.