Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

1 minutes read

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றன.

கிளிநொச்சியில் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது.

அதன்பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அதாவது இன்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டார்.

அதற்கமைய குறித்த பகுதியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்கதக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More