Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விசேட செய்தி: இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம்! 

விசேட செய்தி: இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம்! 

1 minutes read

நாட்டில் எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை வரையும் அதன் பின்னரும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் முறை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய மே மாதம் 31ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் ஜுன் மாதம் 3அம் திகதி புதன் கிழமை வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழமை போன்று இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

எனினும் ஜுன் மாதம் 4ஆம் திகதி மற்றும் 5ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுன மாதம் 6ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மீள் அறிவிப்பு வரை வழமையான இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More