Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கைது செய்யப்படுவாரா நடிகர் சிவகுமார் -சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

கைது செய்யப்படுவாரா நடிகர் சிவகுமார் -சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

1 minutes read

நடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவகுமார் மீது புகார் அளித்தது.

தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட பொலிசார் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, “எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#sivakumar #jothika #thirupathy #சிவகுமார் #ஜோதிகா #திருப்பதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More