Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதைப்பொருள் விருந்து: 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது!

போதைப்பொருள் விருந்து: 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது!

0 minutes read

போதைப்பொருள் விருந்து நிகழ்வைச் சுற்றிவளைத்த பொலிஸார் 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

கடுவெல – ரணால பகுதியில் இன்று இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 7 ஆண்களும் 4 பெண்களும் என 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6.850 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 28 – 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அத்துருகிரிய, வத்தளை, வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ஏனையவர்கள் 25 – 44 வயதுடைய ரணால, பியகம, மருதானை, ஹோகந்தர, அதுருகிரிய, வத்தளை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் பாதாள உலகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான ‘சோரா’ என்பவரும் அடங்குகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More