Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மும்பை கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

மும்பை கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

1 minutes read

மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டி வால்பாடா பகுதியில் உள்ள 3 மாடி குடோன் கட்டிடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த கட்டிடத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்டது.

இதனையடுத்து, நவீன உபகரணங்கள் உதவியுடன் மீட்பு பணி முன்னெடுக்கப்பட்டது. நேற்று இரவு வரை மீட்பு படையினர் குழந்தைகள் உள்பட சுமார் 10 பேரை உயிருடன் மீட்டனர்.

மேலும் பெண் உள்பட 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அத்துடன், கட்டிடம் இடிந்து சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை 8 மணியளவில் மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து சுனில் பிசல்(வயது42) என்ற தொழிலாளியை உயிருடன் மீட்டனர்.

இதேபோல நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மேலும் 6 பேர் இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதனால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கட்டிடம் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இந்த சம்பவம் குறித்து கட்டிட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More