ஹவாய் தீவின் பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர்.
மவுயி தீவில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தீவுக்கு சுற்றுலா வந்த 2 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை தங்க வைக்க ஹவாய் மாநாட்டு மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
மீட்புப் பணிக்கு உதவ ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு உள்ளார்.