Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி-20 உலகக்கிண்ணம்: அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து அணி!

ரி-20 உலகக்கிண்ணம்: அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து அணி!

2 minutes read

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 20ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணியும் பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முஷ்பிகுர் ரஹீம் 29 ஓட்டங்களையும் மொஹமதுல்லா மற்றும் நசும் அஹமட் ஆகியோர் தலா 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளையும் மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 14.1 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் 61 ஓட்டங்களையும் டாவிட் மாலன் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சொரிபுல் இஸ்லாம் மற்றும் நசும் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜேஸன் ரோய் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More