அதிகரித்து வரும் டி20 கிரிக்கெட் லீக்குகளின் செல்வாக்கை குறைக்கும் வகையில் கிரிக்கெட் லீக் அணிகளால் ஒப்பந்தம் செய்ய முடியுமான வெளிநாட்டு வீரர்களை கட்டுப்படுத்துவது உட்பட சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் (ஐ.சி.சி) இரு மாற்றங்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இதில் வெளிநாட்டு வீரர்களை கட்டுப்படுத்துவது தவிர, தாம் ஒப்பந்தம் செய்யும் ஒவ்வொரு வீரருக்கும் லீக்குகள் தேசிய கிரிக்கெட் சபைகளுக்கு கட்டணம் செலுத்தவும் ஐ.சி.சி கட்டுப்பாடு கொண்டுவரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.