Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை

அங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை

10 minutes read

த்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி வாழ்ந்தார், மரணத்தின் பின்னணி என்ன என்பது பற்றிய பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின்றன.

இலங்கை பாதாள உலககுழு தலைவனாக செயற்பட்ட அங்கொட லொக்கா, திடீரென இலஙகையில் முன்னணி பாதாள உலககுழு தலைவனாக மாறியவர். பல கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல், அடிதடி விவகாரத்தில் தொடர்புடையவர் லொக்கா.

இந்தியாவின் கோயம்புத்தூர் பகுதியில் உயிரிழந்த அங்கொட லொக்காவின் பின்னணி என்ன?

2017 ஜனவரி 6ஆம் திகதி, ரத்தரன் கொலையுடன் அங்கொட லொக்கா கவனத்தை ஈர்த்தார்.

அங்கொட பகுதியில் சதுப்பு நிலங்களை நிரப்பி விற்பனை செய்து வந்தவர் ரத்தரன். அந்த பகுதி வர்த்தகர்களிடம் கப்பம் வாங்கியும் வந்தவர். நிலங்களை நிரப்பி, அதிக விலைக்கு விற்பனை செய்த அவரது சட்டவிரோத வர்த்தகத்திற்கு பாதாள உலக குழுவின் துணை தேவைப்பட்டது. இதற்காக அவர் தொடர்பில் வைத்திருந்தவரே, அங்கொட லொக்கா.

ரத்தரனிற்காக மிரட்டல், கொலை, கடத்தல் போன்றவற்றை லொக்கா செய்து வந்தார்.

ரத்தரனின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண். அவரது தந்தை இந்தியர். அவரது தாய் சிங்களவர்.

ரத்தரனும், லொக்காவும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். லொக்காவின் குடும்ப உறுப்பினர்களும், ரத்தரனின் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய உறவினர்களாக இருந்தனர்.

ரத்தரன் சிக்கலில் இருக்கும் போது, அவருக்கு உதவும் முதலாவது நண்பராக லொக்கா இருந்தார். லொக்காவிற்கு ஒரு பிரச்சனை என்றால், ரத்தரன் முதலில் வந்தார்

பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த அங்கொட லொக்கா பொலிசாரிடம் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரை பார்ப்பதற்காக ரத்தரன் சிறைக்கு கிரமமாக சென்றார்.

இந்த நேரத்தில், இன்னொரு பாதாள உலகக்குழு தலைவனான ரனலே சமயங் என்பவனிற்கும், லொக்காவிற்கும் முரண்பாடு ஏற்பட்டது. ஹெரோயின் வர்த்தகத்தின் பிரதான புள்ளி யார் என்ற மோதலே அது. இதனால், இரு தரப்பு ரௌடிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். சாதாரண மோதலில் ஆரம்பித்து, கொலைகள் விழும் கட்டத்திற்கு அந்த மோதல் வந்தது.

ஜனவரி 6, 2017 காலை, அங்கொட நகரில் ஒரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்தது. நகரில், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், தொழிலதிபர் ரத்தரனை சுட்டுக் கொன்றனர்.

தனது மனைவி நளினியின் அழகு நிலையத்திற்கு சென்று, மனைவியை இறக்கி விட்டு திரும்பி வரும் வழியில் கொலை நடந்தது.

கொலை செய்தியை அறிந்த நளினி பேரதிர்ச்சியடைந்தார். உடனடியாக ரத்தரனின் வீட்டிற்கு லொக்காவும் வந்தார். தன்னுடனான முரண்பாட்டினாலேயே, சமயங் இந்த கொலையை செய்தார், அவரை பழிவாங்குவேன் என நளினி முன்னிலையிலேயே சபதம் செய்தார்.

அத்துடன் எந்த சூழ்நிலையிலும் அவருக்கு உதவியாக இருப்பேன் என்றும் ஆறுதல் கூறினார். ரத்தரன் கொலையை தொடர்ந்து, நளினிக்கு பாதாள உலகக்குழுக்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்த நிலையில், லொக்காவே அவரை காப்பாற்றினார்.

ரத்தரன் கொலை தொடர்பாக நுகேகொட பிரதேச குற்றப் பிரிவு விசாரணை நடத்தியது. சில நாட்களுக்குப் பிறகு, கொலைக்கான மூல காரணத்தை பொலிசாரால் கண்டுபிடிக்க முடிந்தது.

ரணலே சமயங் கும்பல் இந்த கொலை நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக சமயங்கின் நெருங்கிய கூட்டாளியான கோதா அசங்க கைது செய்யப்பட்டார்.

கோதா அசங்கவின் வாக்குமூலம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக குறிப்பிட்டார்.

ரத்தரனின் மரணத்திற்குப் பிறகு, அங்கொட லொக்கா அடிக்கடி அவர்களது வீட்டிற்குச் செல்லத் தொடங்கினார். அவர் நளினியின் நிலையை கவனித்து, தனது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முன்வந்தார்.

“என் சகோதரிக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன். பயப்படாதே. இன்னும் சில நாட்களில் சமயங்கின் கதை முடிவடையும். நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.” என நளினியை ஆசுவாசப்படுத்தி வந்தார்.

அந்த நேரத்தில் அங்கொட லொக்கா ஒரு பெரிய பாதாள உலக சக்தியைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார். பாதாள உலகக்குழுக்களின் கோட்பாதர் என்று அழைக்கப்படும் மகந்துரே மதுஷுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த அங்கொட லொக்கா, அதன் மூலம் தனது பாதாள உலக சக்தியை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்.

சாமியா, லாசியா உள்ளிட்ட பிற பிரபல ரௌடிகளுடன் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வந்த அங்கொட லொக்கா, அவர்களை கைவிட்டு, தனி பயணத்தைத் தொடங்கினார்.

அங்கொட லொக்கா அதிகாரம் செலுத்துவதற்கு முன்னர், அத்துருகிரியவின் முல்லேரியா, அங்கொட பகுதியில் ஆதிக்கம் செலுத்தியவர் சாமியா. ஆனால் மதுஷு எழுச்சி பெற்ற பின்னர், அவருடனிருந்த அங்கொட லொக்கா அந்த ஏரியா தாதா ஆனார். இதையடுத்து சாமியா உள்ளிட்டவர்கள், அரங்கிலிருந்து ஒதுங்கி, லொக்காவிற்கு வழிவிட்டனர்.

அந்த நேரத்தில் ரத்தரனின் கொலை குறித்த பல்வேறு கதைகள் பாதாள உலகம் முழுவதும் பரவி வந்தன. ரத்தரன் கொலைக்கு அவரது கும்பல் சம்பந்தப்படவில்லை என ரணலே சமயங் கூறி வந்தார். அங்கொட லொக்கா தொலைபேசியில் அழைத்து வினவியபோதும், சமயங் இதை தெரிவித்தார்.

லொக்காவிடமிருந்து ஒதுங்கியிருந்த லாசியா, சாமியா ஆகியோருக்கு தொடர்பிருக்கலாமென அவர் கூறினார். ரத்தரன் கொலையின் சூத்திரதாரி யார் என்பதை தேடி, பாதாள உலகக்குழுக்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சமயத்தில் 2017 பெப்ரவரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

களுத்துறையில் சிறைக்கைதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சமயங் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

அப்போது துபாயில் பதுங்கி இருந்த மகந்துரே மதுஷ் மற்றும் காஞ்சிபானை இம்ரான் ஆகியோர் இந்த தாக்குதலை வழிநடத்தினர். தாக்குதலை தலைமை தாங்கி நடத்திவர் அங்கொட லொக்கா.

பொலிசாரின் சீருடை அணிந்தபடி நின்ற லொக்கா தலைமையிலான குழு தாக்குதல் நடத்தியது. 2 சிறை காவலர்கள் கொல்லப்பட்டனர். சமயங் உள்ளிட்ட 7 கைதிகள் கொல்லப்பட்டனர்.

தாக்குதலை தலைமைதாங்கியது அங்கொட லொக்கா என்பதை அறிந்த பொலிசார், அவரை பின்தொடர தொடங்கினர். அங்கொட லொக்கா தப்பியோடினார். பொலிசாரிடமிருந்து தப்பிக்க சிலாபத்திற்கு சென்றார் லொக்கா.

கொழும்பு ஜம்பட்டா வீதியின் பாதாள உலக குழு தலைவன் புக்குடுகண்ணா, அங்கொட லொக்காவின் நெருங்கிய நண்பர். லொக்கா நாட்டை விட்டு வெளியேற புக்குடுகண்ணா ஒரு படகு தயார் செய்திருந்தார்.

லொக்காவும், லாபயாவும் சிலாபத்திலிருந்து கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றனர். இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில், இந்திய நாட்டவர் போன்று பெயரை மாற்றி பாஸ்போர்ட் பெற்றார்.

அங்கொட லொக்கா, ஆர்.பன்ரதீப் சிங் என மாறி, போலி ஆதார் அட்டை, பாஸ்போர்ட் பெற்றார்.

பின்னர், பாதாள உலக தலைவன் மக்கந்துரே மதுஷுவைத் தேடி துபாய் சென்றார்.

சமயங்கைக் கொன்று நாடு முழுவதையும் உலுக்கிய தாக்குதலை வழிநடத்திய தனக்கு, மதுஷ் பெரு வரவேற்பை தருவர் என லொக்கா நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. அவருக்கு எந்த அங்கீகாரமும் மதுஷிடமிருந்து கிடைக்கவில்லை.

இதனால் லொக்கா மிகுந்த ஏமாற்றமடைந்தார். மகந்துரே மதுஷ் தனது பாதாள உலக கூட்டாளியான காஞ்சிபானை இம்ரானுடன் நெருக்கமாக இருந்தார். மதுஷ் எப்போதும் காஞ்சிபனியின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார். அங்கொட லொக்கா இருவரிடமும் கோபப்படவில்லை. துபாயில் சிறிது நேரம் கழித்த பிறகு, அங்கோடா முதலாளி சொந்தமாக வியாபாரம் செய்வதில் ஆர்வம் காட்டினார்.

இதற்கிடையில், அவர் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல நாடுகளுக்குச் சென்றார்.

மதுஷ் தனக்காக பணியாற்றியவர்கள் சுயமான வாழ உதவி செய்யவில்லை. அதனால் நான் எப்படியோ தனியாக எழுந்திருக்கிறேன் என லொக்கா தனது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். அவர் ஹெரோயின் வியாபாரத்தை சொந்தமாக நடத்த முயன்றார், ஹெரோயின் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார்.

இதற்கிடையில், அங்கொட லொக்கா அடிக்கடி இந்தியாவுக்கு வரத் தொடங்கினார். அந்த நேரத்தில் ரத்தரனின் மனைவி நளினி, லொக்காவின் கள்ளக்காதலி ஆனார்.

‘நீங்கள் இலங்கையில் இருப்பது பாதுகாப்பானது அல்ல. நீங்கள் இந்தியாவுக்கு வரும்போது நான் உங்களை கவனித்துக்கொள்வேன், நாங்கள் அங்கு மகிழ்ச்சியுடன் வாழ முடியும். ‘- இது லொக்காவினால் அவருக்க சொல்லப்பட்டது.

நளினி, காதல் அரவணைப்பைத் தேடி இந்தியா வந்தார்.

இவர்களது வீடு இந்தியாவின் கோயம்புத்தூரின் புறநகரில் இருந்தது. லொக்கா ஹெராயின் வியாபாரத்தில் பல வாரங்களாக துபாயில் இருந்தபோதிலும், இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று நளினியுடன் நெருக்கமாக இருந்தார்.

அங்கொட லொக்காவிற்கு நிறைய பணம் வந்தது. இதனால், அழகான காதலிகளை தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில், மக்கந்துரே மதுஷ், காஞ்சிபானை இம்ரான் உள்ளிட்ட பாதாள உலக குண்டர்கள் கும்பலை துபாய் பொலிசார் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதில் லொக்கா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

மதுஷ், காஞ்சிபானை இம்ரான் மற்றும் பலர் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், ஹெரோயின் பாதாள உலக சக்தி அங்கோடா முதலாளிக்கு முழுமையாக மாற்றப்பட்டது.

அப்போது மதுஷின் மனைவி மற்றும் காஞ்சிபானை இம்ரானின் மனைவியும் துபாயில் இருந்தனர். ஹெரோயின் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், வியாபாரத்தை நடத்துவதற்கும் அவர்களுக்கு வலிமை இருந்தபோதிலும், இந்த இரண்டு பெண்களாலும் இலங்கையில் ஹெரோயின் விநியோகிக்கும் பலம் இருக்கவில்லை.

அப்போதுதான் இருவரும் ஹெரோயின் தொழிலைத் தொடர அங்கொட லொக்காவின் உதவியை நாடினர். அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, மகந்துரேமதுஷின் அழகான இளம் மனைவியையும், தனது காதலியையும் பயன்படுத்தி ஹெரோயின் வலையமைப்ப இயக்க தொடங்கினார்.

துபாய் மற்றும் இந்தியாவில் மாறிமாறி தங்கியிருந்தபடி ஹெரோயின் வர்த்தகத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். வர்த்தகத்தில் பெரும் பணம் ஈட்டிக் கொண்டிருந்தார். வாழ்க்கை சுகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

அப்போது, அவருக்கு எதிராக இலங்கையில் ஒரு பாதாள உலக நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அங்கொட லொக்காவுக்கு நெருக்கமாக இருந்து பின்னர் விலகிச் சென்ற சாமியா, ரத்தரனின் கொலை குறித்த அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் பெற்றுக்கொண்டார்.

அதாவது- ரத்தரன் கொலையில் தொடர்புபட்டிருந்தது சமயங் அல்ல. அங்கொட லொக்காவே அதை செய்தார்!

ரத்தரனின் மனைவியை அடைவதற்காகவே லொக்கா இந்த கொலையை செய்தார், ஆனால் அது தெரியாமல் நளினி லொக்காவுடன் வாழ்கிறார் என பாதாள உலகக்குழுக்கள் அறிந்து கொண்டன.

இந்த தகவல்களை சாமியா, தனது நெருங்கிய சகாக்களுடன் பகிர்ந்து கொண்டார். சாமியாவும் அவரது பாதாள உலக தோழர்களும் ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டிருந்தாலும் கொல்லப்படவில்லை. கொலை செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும், அங்கொட லொக்கா, மக்கந்துரே மதுஷு எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி கொலைகளைச் செய்தார்கள்.

சாமியாவும் அவரது குழுவும் இந்தக் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்திருப்பது அங்கொட லொக்காவுக்குத் தெரியாது. அவர் நளினியை தனது காதலியாக வைத்திருந்து, அன்பை அனுபவித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்.

நளினியின் சகோதரர் இத்தாலியில் இருந்தார். அங்கொட லொக்கா செய்த கிரிமினல் செயல் குறித்து நளினியின் சகோதரருக்கு தெரிவிக்க வேண்டும், இதை இனி ஒரு இரகசியமாக வைக்கக்கூடாது என்று சாமியா முடிவு செய்தார்.

சாமியா தொலைபேசி அழைப்பேற்படுத்தி, ரத்தரனின் கொலைக்கன மூல காரணத்தை நளினியின் சகோதரருக்கு கூறினார்.

அங்கோடா முதலாளி ஒரு மிருகம். நளினியைக் கைப்பற்ற ரத்தரனை கொன்றார். அந்த பெண்ணுக்கு இது எதுவும் தெரியாது. லொக்கா நீண்ட காலமாக நளினியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ரத்தரன், நளினியை மிகவும் காதலித்து வருகிறார். ரத்தரனை மீறி நளினியை ஒருபோதும் அடைய முடியாது என்பதை அங்கொட லொக்கா உணர்ந்துள்ளார். அதனால்தான் அவர் ரத்தரனை கொல்ல திட்டமிட்டார்.

சமயங்கின் அடியாட்கள் இருவருக்கு, ரத்தரனை கொல்ல பணம் கொடுத்துள்ளார். சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் கோதா அசங்கவும் இன்னொருவரும் அந்த கொலையை செய்தனர் என்ற தகவல்களை, நளினியின் சகோதனிடம் தெரிவித்தார்.

ரத்தரனின் கொலையின் உண்மையான நிலைமையை விளக்கும்போது நளினியின் சகோதரர் அதிர்ச்சியடைந்தார்.

கொலை பழியை சமயங் குழுவினர் மீது சுமத்துவதற்காக, சமயங்கின் அடியாட்களை பணம் கொடுத்து இந்த கொலையில் ஈடுபடுத்தியதை நளினியின் சகோதரன் தெரிந்தார்.

இத்தாலியில் இருந்த சகோதரர், இந்த நிகழ்வுகள் அனைத்தையும் நளினியிடம் கூறினார். கணவரின் உயிரைப் பறித்த குற்றவாளியுடன் வசிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது நளினி மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் அடைந்தார்.

எனினும், சகோதரியை அமைதிப்படுத்தி, பொறுத்துக் கொள்ளும்படி சகோதரன் கேட்டுக் கொண்டார்.

இதை அறியாத அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் ஒரு ஆடம்பரமான வீட்டில் காதலியுடன் மகிழ்வாக வாழ்ந்து வந்தார.

உடற்பயிற்சி என்பது அங்கொட லொக்காவின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அங்கொட லொக்கா இலங்கையிலும் உடற்பயிற்சியை கிரமமாக செய்து வந்தார். லொக்கா கோவையில் ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கும் செல்வது வழக்கம்.

கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியதால், லொக்காவின் போதைப்பொருள் வர்த்தகம் தடுமாறத் தொடங்கியது. அவர் கடந்த மார்ச் முதல் இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் நளினியும் வீட்டில் இருந்தார். அவளும் இலங்கைக்கு வர முடியாததால், அவர் கோவைக்குச் சென்று லொக்காவை திருப்திப்படுத்த வேண்டியிருந்தது.

ஜூலை 3 ஆம் திகதி காலையில், லொக்கா வழக்கம் போல் உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்லத் தயாரானார். உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒரு தூண்டுதல் பானத்தை குடிப்பது அவரது பழக்கம். அதே நாளில், லொக்கா வழக்கம் போல் ஒரு தூண்டுதல் பானம் எடுத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். அப்போது நளினி வீட்டில் தங்கியிருந்தார்.

உடனடியாக அவர கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில், லொக்கா காலமானார். இந்தியர் ஒருவர், அவரது மனைவி மற்றும் நளினி ஆகியோர் லொக்காவின் உடலை பெற்று தகனம் செய்தனர்.

லொக்கா ஒரு இந்தியர் என குறிப்பிடப்பட்டே தகனம் செய்யப்பட்டது.

எனினும், இந்த தகவல்களை நளினியும் மற்றவர்களும் இரகசியமாக வைக்க முடியவில்லை.

ஜூலை 4 ம் திகதி, கோயம்புத்தூரில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரையும், அவரது மனைவியையும், நளினியையும் இந்திய போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மூவரும் தற்போது இந்திய சிஐடியின் காவலில் உள்ளனர். அண்மையில் இலங்கையின் தேசிய செய்தித்தாள்களில் செய்தி வெளியானதையடுத்து லொக்காவின் மர்மமான மரணம் குறித்து இந்திய சிஐடி விரிவான விசாரணையைத் தொடங்கியது.

லொக்காவின் மரணம் குறித்து பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதன் உண்மை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

கணவர் ரத்தரன் கொலை சூத்திரதாரி லொக்கா என கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த நளினி, அவரது சக்தி பானத்தில் நஞ்சு சேர்த்து அவரைக் கொன்றதாக வதந்தி பரவியுள்ளது.

ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை நாளை வெளியிடப்படும். இந்த மரணத்திற்கு என்ன காரணம் என்பதை அறியலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More